Monday, March 15, 2010

தேவாமிர்தம்

சரணம் அடைந்தது தத்துவம்
த்வைதம் என்றது தர்க்கம்
அத்வைதம் என்றது அனுபவம்
தாம்பத்யம் என்பதோர் தவம்
அலையடிக்கும் கரை சலனம்
ஆழ்கடல் நடுவிலே மோனம்
முத்தென விளைந்திடும் ஞானம்
கொடுக்கவும் எடுக்கவும் வேண்டாது
கண்டது விண்டிட தோன்றாது
விழுங்குகின்ற தேவாமிர்தம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community