Saturday, March 20, 2010

முரண்கள்

தான் என்ற ஒன்று
தரணியில் இன்று
காற்றாய் சென்று
நிறையும் என்று
எதிர்பார்த்ததன்று

நீ ஆணி
நான் சுத்தியல்
என் அடிதான்
உன் தலைக்கு
மோட்சம்

நீ செருப்பு
நான் கால்
எனக்காக தேய்
பிறந்த பயனை
அடைவாய்

இப்படித்தான் நடந்தது
மூளைச்சலவை
சத்தமில்லை
சங்கடமில்லை
வண்டி ஓடியது

ஆணின் வேதம்
உடைக்கும் பூதம்
அடுக்குது வாதம்
போடுது கோஷம்
கலையுது வேஷம்

மருந்துக்கு உண்டு
விளைவென்று ஒன்று
பக்கவிளைவு ஒன்று
புரட்சிக்கும் உண்டு
இவ்விளைவிரண்டு

தாய்மைச் சுடர்கள்
காவியத்தொடர்கள்
தரமான வைரங்கள்
தாரமான நெருப்புகள்
ஈரமான நெஞ்சங்கள்

சுதந்திர பறவைகள்
அபூர்வ சிந்தாமணிகள்
அல்லி ராணிகள்
மதியா வேதாளங்கள்
புதிய பூபாளங்கள்

கள்ளமில்லா மொட்டுக்கள்
களம் வெல்லும் சிட்டுக்கள்
கலையின் மாடங்கள்
இலக்கிய ஓடங்கள்
இனிக்கும் பாடங்கள்

திறந்த தொந்திகள்
அரிதார மந்திகள்
அறுசுவை பந்திகள்
கலியுக குந்திகள்
பண்பின் அந்திகள்

திறந்த மேடைகள்
திரண்ட தேனடைகள்
ராணி தேனீக்கள்
கூர் கொடுக்குகள்
அடிமை ஆணீக்கள்

விதைத்தது திணை
விளைந்தது வினை
தொடுக்குது கணை
சொல்லுது நினை
உண்மைதனை

தோட்டக்காரா
கைகட்டி நிற்பாயா
களை எடுப்பாயா
பயிர் வளர்ப்பாயா
பலன் பெறுவாயா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community