Wednesday, March 17, 2010

நண்பன்

கூறத்தான் வார்த்தைகள் போதாது
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
மாறாத மறக்காத பற்று அது
கொஞ்சமும் குறையாத பாசம் அது
நிலையான நிறைவான நட்பு அது
தடையின்றி பிரவகிக்கும் ஊற்றது
கணமும் கவனம் கலையா காவலது
துடிப்பாக ஓடி வந்து நிற்கையிலே
வெறித்தனமாய் கொஞ்சுகையிலே
அறிவோடு கண்கள் பார்க்கையிலே
ஆவலாய் காத்திருக்கும் பாவத்திலே
வாலை ஆட்டும் வேகத்திலே
திருப்பி ஆட்டி மகிழ
வாலில்லாதது குறையே.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community