Wednesday, March 17, 2010

காதலன்

அழைக்கின்றான் என்னை
உருவத்தைக் காட்டாமல்
குரல் மட்டும் கேட்கிறது
நினைவு தெரிந்த நாள் முதல்
நிழல் போல் தொடர்வது
நிச்சயமாய் தெரிகிறது
நேருக்கு நேர் முகம் காண
நெருங்கிய பல நொடிகள்
சந்திக்க நேராமலே
சங்கமம் நிகழாமலே
நழுவி விட்டன எப்படியோ
கண்ணாமூச்சி காட்டுகிறான்
கைப்பிடிப்பான் நிச்சயமாய்
என்னை ஒட்டி வரும் அவன்
என் ஒரே மெய்க்காவலன்
மெய்யான ஓர் காதலன்
என் உயிரை கேட்கிறான்
அடையாமல் விடமாட்டான்
கூடிட நானும் நாணி
ஓடி ஒளிவதை ரசித்தே
துரத்தும் ளவந்தான்
அவன் கையணைப்பில்
அமைதி காண வருவேன்
என்றறிந்து காத்திருக்கும்
ஏமாறாத எமகாதகனை
நீங்கா நினைவாய் னவனை
நிதமும் எண்ணி நகைக்கிறேன்
நிறைந்த மனதுடன் நிற்கிறேன்
மங்கல நாளிலே கைத்தலம்
பற்றிடுவான் என் கொற்றவன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community