Saturday, March 20, 2010

நிவாரணப்பணி

வினோதம்தான் உண்மைகள் வெளிப்படும் விதம்
காராக்கிருக இருள் அகன்று ஒளி புகுந்தால்
கண்கள் கூசி மூடாமல் என்ன செய்யும்
புதிய ஒளிக்கு பழகும் வரை திக்குமுக்காடல்
காய்ந்து வரண்ட மண்ணில் வீழும் நீர்த்துளி
காணாமல் போகுமே தாகம் தீரும் வரை
மூச்சடக்கி கிடந்தபின்னே வீசும் தென்றல்
முதல் நொடிகளில் திணறல் தந்திடுமே
விடுதலை அடைந்த கால்கள் வெறிகொண்டு
ஓடுமோ பந்தயக்குதிரையாய் தலைதெறிக்க
மாட்டுத்தொழுவில் அடைந்து கிடந்தவளை
அவிழ்த்து விட்டதிலே கூண்டுக்கிளிக்கு
சுதந்திரம் கிடைத்ததிலே கண்மண் தெரியாத
ஆனந்தம் அதுவே தந்ததே ஒரு போதை
எதிர் கடைசிக்கு ஓடும் கடிகார பெண்டுலம்
ஊசலாடி ஓடி ஓய்ந்து நடுநிலை காணுமே
புதுவெள்ளம் கரையுடைத்து செல்லும் போது
சேதாரம் இல்லாமல் போவதில்லையே
நிவாரணப்பணிதன்னை துவங்குவோம்
நன்னாளில் நங்கையர் துலங்குவோம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community