Thursday, March 18, 2010

அறிவுரை

ஆராதிக்கிறேன் என்பான் ஆண்மகன்
அள்ளிச் சொறிவான் பேரன்பினை
சொல்லில் தேனைத் தடவுவான்
சொக்கும் வாக்குகள் வழங்குவான்
சின்னச் சின்ன சேவைகள் செய்வான்
சிறையெடுத்துச் செல்லத் துடிப்பான்
ஊரை மறந்தேன் உறவை துறந்தேன்
உனக்காக உயிரைக் கொடுப்பேன்
அத்தனை அழகான பொய்களையும்
அசங்காமல் போற்றிடு பெண்ணே
திருநாளை அழைத்து வரச்சொல்
மங்கல நாணை பூட்டிக்கொள்
குழந்தையாகவே இருந்திடுவான்
குழம்பாமல் உன் மடி கொடு
காடு வரை ஆதரவாய் கை கொடு
காலத்தோடு காமம் கரைந்தபின்னும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community