Wednesday, March 17, 2010

பத்திரமாய்

தென்றலாய் நடந்து வந்தாய்
மனதில் வீசியது புயல்
குளிர்ந்த பார்வை வீசினாய்
உள்ளே வெடித்தது எரிமலை
அன்பாய் அழகாய் பேசினாய்
அண்டம் மீண்டும் சிதறியது
அவசரமாய் ஏனடி ஓடினாய்?
ஆவியைத் தொட்ட பாவையே!
இன்னும் என்னுள் இனிக்கிறதே
இருவாச்சி போல் மணக்கிறதே
தரையில் கால் பாவ மறுக்கிறதே
விண்ணில் மனம் பறக்கிறதே
இந்தக் கணத்தை, என்னுணர்வை
பத்திரமாய் பொத்திக் காத்திட
பரவசமாய் பிரித்துப் பார்த்திட
பதித்து வைக்கிறேன் இவ்வரிகளிலே.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community