Sunday, March 21, 2010

வினை

உண்மை என்றும் உள்ளே ஒளிந்திருக்கும்
உரித்துத் தின்ன இனிக்கும் பலாச்சுளையாய்

புள்ளி போல் செய்த தவறு வருடங்கள்
தள்ளி பூதாகரமாய் வளர்ந்துவிடுமே
கள்ளிச்செடி ஒன்றினைப் போலவே
முள்ளாய் கிழித்து ரணமாய் ஆக்குமே
பள்ளிப்பருவ ராமனும் விளையாட்டாய்
எள்ளி நகைத்தான் மந்தரை கூனலை
அள்ளிக் கொண்டான் அத்தனை இடரை
சுள்ளியில் பற்றியெரியும் கானகத்து
கொள்ளியாய் நிகழ்ந்தது பாரத யுத்தம்
கிள்ளிவிட்டது பாஞ்சாலி சிரிப்பொலி
புள்ளினம் கூவும் காலை செய்த வினை
வெள்ளி முளைக்கும் வேளை விடியும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community