Wednesday, August 31, 2011

ஆணவம்

IndiBlogger - The Indian Blogger Community
ஆணவம் என்ன செய்யும்
கண்ணை மறைக்கும்
கருணை மறுக்கும்
குழிக்குள் தள்ளும்
குலத்தை அழிக்கும்
முள்முடியது அணியல்ல

Sunday, August 28, 2011

நிழற்படங்கள்

IndiBlogger - The Indian Blogger Community
இறைவனும் இறைவியும் சேர்ந்து ரசிக்க
உலகத் திரையரங்கில் எத்தனையோ
நிழற்படங்கள் எதிர்பாராத திருப்பங்கள்
திகிலுடன் சாகசம் நகைச்சுவை உருக்கமென
நவரச வேடிக்கைகள் விரிகையில் அவரே
திகைத்து எழுதிய கதை வசனம் மறப்பரோ

மருந்து

IndiBlogger - The Indian Blogger Community
கலந்து ஊற்றிய மருந்து
காரிகையெனும் ஒரு விருந்து
வஞ்சம் பிடிவாதம் பொறாமை சூது
இன்னும் பல அரக்கப் போக்கு
ஒவ்வொன்றும் இத்தனை அவுன்சு
பழைய சினிமா பாட்டில் கேட்டது

Saturday, August 27, 2011

சத்தியம்

IndiBlogger - The Indian Blogger Community
கையில் உள்ள ஒரு பறவை
புதரில் உள்ள இரண்டினும் உத்தமம்
இருப்பதை விட்டு பறப்பதற்கு
அலைவது அறிவீனமென்பது சத்தியம்

Thursday, August 25, 2011

நடித்தவன்

IndiBlogger - The Indian Blogger Community
செவி மடுக்கும் பாவனையில்
உதிரும் பல 'உம்', 'அடடா'
ஆர்வமாய் அவனிடம் கொட்ட
கோடி கதை அவளிடமிருக்க
தன்னை மறந்து கணினியில்
அவன் லயித்திருக்க அதை
அவளும் உணர்ந்து மடக்க
நடித்தவன் முழிப்பது திருதிரு

Wednesday, August 24, 2011

ஒரு சொல்

IndiBlogger - The Indian Blogger Community
சொல் ஒரு சொல்
முடியாது
மாட்டேன்
போடா
லூசு
ஏதாவது ஒன்று

Tuesday, August 23, 2011

கன்னுக்குட்டி

IndiBlogger - The Indian Blogger Community
கன்னுக்குட்டி துள்ளுவதை
கண்டாலே மனம் துள்ளுவதேன்
கள்ளம் கபடில்லை அதனிடம்
காலம் இருக்கு பதவிசு வந்திட
கவலை தெரியாத பருவம்
கடிதாய் முடிந்திடுவது பாவம்

சின்ன மழையே

IndiBlogger - The Indian Blogger Community
என்சொல்ல
சின்ன மழையே
செல்ல மழையே
சுகமாய் தூவு
செடியோடு நானும்
சிலிர்க்கின்றேனே
சில்லென்று மனது
சிரிக்கின்றதே நிதம்

Monday, August 22, 2011

வாழியவே

IndiBlogger - The Indian Blogger Community
விடைத்தாளை விசிறியடிக்கும் ஆசிரியருண்டு
அழகாய் திருத்தி பாராட்டி தெளிவாய் விளக்கிடும்
உயர்ந்த வழிகாட்டிகளும் உண்டு வகுப்பறையில்
விளைநிலத்தை பண்படுத்துவோர் வாழியவே

Sunday, August 21, 2011

கருமம்

IndiBlogger - The Indian Blogger Community
எக்காலம் எது நடக்கவேண்டுமோ
அக்காலம் அது நடந்தே தீரும்
பலனை எண்ணாது கருமம் செய்திட
பளுவாய் எதுவும் தெரிவதில்லை

விவகாரம்

IndiBlogger - The Indian Blogger Community
வெறுப்பே காட்டாத முகங்கள்
வேற்று மனிதர் பல்லிளித்தாலும்
விகாரமாய் கண்ணால் மேய்ந்தாலும்
வேண்டுமென்றே கேள்விகள் கேட்டாலும்
விரலால் தொட்டு நோட்டம் போட்டாலும்
விரசம் ததும்பும் வித வித பாவனைகளும்
வாங்குகிற சம்பளப் பணத்திற்காக
வெளிக்காட்ட முடியாத விவகாரம்

Saturday, August 20, 2011

பேறு

IndiBlogger - The Indian Blogger Community
போ என்றவுடன் போகாமல்
வா என்றவுடன் வராமல்
தரும் தொல்லை தீராமல்
இருக்கும் ஆயர்பாடி கண்ணன்கள்
இல்லாத இல்லங்கள் உண்டோ
யசோதையின் பேறு மிகப்பெரிது

துன்பங்கள்

IndiBlogger - The Indian Blogger Community
கூட்டமாய் தான் படையெடுக்குமாம் துன்பங்கள்
ஒத்தை வரிசையில் வராதாம் மோதிப் பார்க்க
மெத்த சரியாகத்தான் சொன்னார் ஷேக்ஸ்பியர்
தன்மானமும் தன்னம்பிக்கையும் துவளவிடாதே

புளங்காகிதம்

IndiBlogger - The Indian Blogger Community
உணர்த்திட்டார் ஒரு 'உம்'மில்
உப்பும் உரைப்பும் கச்சிதம்
பக்குவமான நல்தாளிதம்
ருசியும் மணமும் அதிகம்
கண்மை கரைய சமைத்தவள்
அடைகிறாள் புளங்காகிதம்

ஆணினம்

IndiBlogger - The Indian Blogger Community
குந்தகமாம் தூக்கத்திற்கு
கணவனின் குறட்டை சத்தம்
கோர்ட்டுக்கு போவாள் வெள்ளைக்காரி
கோபமாய் மணவிலக்குக் கோரி
கொண்டையை பிடித்து உலுக்கி
காலால் மிதித்து உதைத்து
கொடுமை பல செய்தாலும் இங்கே
கொண்டவனை கும்பிடுவாள் குலமகள்
கொட்டும் மழை அவள் வார்த்தைக்கு
குருட்டு நம்பிக்கையில் வளமாய் ஆணினம்

Friday, August 19, 2011

தேர்தல்

IndiBlogger - The Indian Blogger Community
அதிகமாம் மக்கள் ஆதரவு
ஆணவமாய் எண்ணியது
பொய்யாய் போனது கணக்கு
பொங்கி எழுந்தது ஊர்சனம்
மிரட்டியதும் சுரண்டியதும்
போதுமென சொன்ன தேர்தல்

புதிய தலைமுறை

IndiBlogger - The Indian Blogger Community
நிறுத்துவார்கள் சீண்டலையென
பொறுமை காத்தாள் புது மருமகள்
புரிந்துகொண்டாள் கொண்டவனவர்கள்
கைப்பாவையாய் இயங்குவதை
புரிதலில்லா துணையுடன் இது
நரகமென்று விலகித் தீவானாள்
இருந்தும் இல்லாத இந்த அவலம்
புதிய தலைமுறை காணாதது

கோர தாண்டவம்

IndiBlogger - The Indian Blogger Community
புரியுமா இன்றைய புத்திசாலி மனிதனுக்கு
பூமி ஏன் வெப்பமானது மழை ஏன் மாறுது
சுனாமியும் சூறாவளியும் ஏன் வருகுது
வீடிழந்த யானை ஏன் வயலை அழிக்குது
எங்கும் மாசு எதிலும் மாசு எத்தனை விதத்திலே
புதிது புதிதாய் நோய்களும் கிருமிகளும் தோன்ற
சுகம் ஒன்றே குறியாய் சுயநலமே கொள்கையாய்
கோர தாண்டவம் ஆட தொலையுது எதிர்காலம்

கபட நாடகம்

IndiBlogger - The Indian Blogger Community
இறுக அணைத்த நிகழ்வு சரித்திரம்
எதிரியின் வஞ்சக தழுவல் கொல்வதற்காக
ஆயின் குத்திய குறுவாளை தடுத்தது
மராத்திய சிங்கம் அணிந்த இரும்பு கவசம்
எதிர்பார்த்திருந்த தாக்குதலுக்கு
பதிலடியாய் குடலை உருவியது
மதியூகியின் புலிநக ஆயுதம்
வியக்க வைக்கும் கபட நாடகம்

Thursday, August 18, 2011

மாற்றம்

IndiBlogger - The Indian Blogger Community
அவனாக தேடிய துணை
தேளோ திரவியமோ
தீராத தலைவலியோ
சிரிக்கும் சிங்காரி உறவை
சிதைப்பாளோ சேர்ப்பாளோ
குலம் கோத்திரம் வேறு
கூடி வாழ வந்தது துணிவு
புது யுகத்தின் சூதாட்டம்
போகப் போகத் தெரியும்
பெற்றவர் பொறுப்பு சுருங்க
பறவைகள் சிறகை விரிக்க
அவசியமாகிவிட்ட மாற்றம்
அதிலில்லை ஏதும் குற்றம்

பெண்ணிவள்

IndiBlogger - The Indian Blogger Community
ஆரம்பம் எதுவென தெரியாமல்
அப்பாவி கணவன் தடுமாறுகிறான்
நிர்மலமான வானம் ஏன் கருத்தது
கடகடவென ஏன் இடித்தது
பளீரென ஏன் மின்னியது
கனமழை ஏன் கொட்டியது
பெண்ணிவள் புயலா பூகம்பமா
என்ன பிழை நான் செய்தேன்
குறை ஒன்றும் கூறவில்லை
வாதமும் புரியவில்லை
தடை ஏதும் சொல்லவில்லை
ஒன்றுமே புரியவில்லையே
இன்று நேற்றல்ல பல மாதம்
கடந்தும் கனன்று கொண்டிருக்கும்
என்றோ பேசியது செய்தது
எரிமலையை ஆராய்ந்து பயனுண்டோ

Wednesday, August 17, 2011

மருந்து

IndiBlogger - The Indian Blogger Community
நற நற சத்தம் நள்ளிரவில்
திடுக்கிட்டு விழித்தவளருகில்
அமைதியாய் தூங்கும் பிள்ளை
வயிற்றில் பூச்சி பிரச்சினையிது
வைத்தியரிடம் காட்டவேண்டும்
தருவார் இதற்கு தகுந்த மருந்து

திருவிழா

IndiBlogger - The Indian Blogger Community
இடி விழ மின்னல் வெட்ட மழை கொட்ட
ஒலி ஒளி வெள்ளமாய் பருவ கால திருவிழா
வெந்த பூமியும் நொந்த மனமும் குளிர
மேலும் இதுபோல் வரமாய் வருக தருக

Tuesday, August 16, 2011

இனிமை

IndiBlogger - The Indian Blogger Community
புரியுமா சாடை என அவளும்
தெரியுமா தாபம் என அவனும்
அது ஒரு அழகான ஊமை நாடகம்
எலியும் பூனையுமாய் வெளி வேடம்
கொடியும் கொம்புமாய் உண்மை பற்று
சம்சாரத்தின் இனிமை முரண்கள்தானே

தனி அடையாளம்

IndiBlogger - The Indian Blogger Community
சிகப்புத் தீற்றலால் திருமதியென அறிவித்தாள்
தாலியோடு அதையும் தைரியமாய் அழித்தாள்
தனக்கென தனி அடையாளம் தேடும் தன்னம்பிக்கைத்
தலைமுறையைப் பார்த்து விம்ம வேண்டும் பெருமையில்

பாதுகாப்பா

IndiBlogger - The Indian Blogger Community
எறும்பை அழைத்தூட்ட அரிசி மாவு கோலம்
ஆயின் அதை விரட்ட இனிப்புகளைச் சுற்றி
கோடாய் வரைந்த பூச்சி மருந்து தடுப்பு
அனுமதித்த சலுகைகள் அவசிய தடைகள்
என்றும் எங்கும் இருப்பது எறும்புக்கு மட்டுமா
எழுதாத சட்டங்கள் எல்லைகள் பாதுகாப்பா

Monday, August 15, 2011

பெண்ணே

IndiBlogger - The Indian Blogger Community
முன் நடந்தான் நெஞ்சு நிமிர்த்தி ஆடவன்
அவன் பின் குனிந்து நடந்தாள் பெண்மணி
நூற்றாண்டுகள் பல சென்றன இப்படியே
நாகரிகம் நல்லெண்ணம் சமத்துவம் தோன்ற
தோளோடு தோளாய் சேர்ந்து இருவரும் நடக்க
மேலும் உருண்டன வேகமாய் வருடங்கள் பல
புலியாய் பாய்கிறாள் முன்னேறிய பெண்ணின்று
பூனையாய் பம்மிக்கொண்டு பின்னால் ஆண்மகன்
வட்டம் முடிவது துவக்கப் புள்ளியில் அறிவோம்
பெண்ணே உடைப்பாயோ பழைய சித்தாந்தம்
புதிதாய் படைப்பாயோ நிகரில்லா சரித்திரம்

Thursday, August 11, 2011

கடவுளே

IndiBlogger - The Indian Blogger Community
கடவுளே உமக்கு சுக்கிர தசையோ
மக்களை வசியம் ஏதும் செய்தீரோ
நாளென்றும் கிழமையென்றும் புதுசாய்
பகலிலும் இரவிலும் அலங்காரமாய்
சந்து முக்கிலும் மலை உச்சியிலும்
ஊர் எல்லையிலும் கடைத்தெருவிலும்
எல்லா பெரிய சிறிய கோவில்களிலும்
பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடுதே
தொடரும் புதுப் புதுக் கேளிக்கையிடை
மனங்கள்தான் பழுத்த மர்மமென்ன

Wednesday, August 10, 2011

The Human Seasons

IndiBlogger - The Indian Blogger Community
The Human Seasons

FOUR Seasons fill the measure of the year;
There are four seasons in the mind of man:
He has his lusty Spring, when fancy clear
Takes in all beauty with an easy span:
He has his Summer, when luxuriously
Spring’s honey’d cud of youthful thought he loves
To ruminate, and by such dreaming high
Is nearest unto heaven: quiet coves
His soul has in its Autumn, when his wings
He furleth close; contented so to look
On mists in idleness—to let fair things
Pass by unheeded as a threshold brook.
He has his Winter too of pale misfeature,
Or else he would forego his mortal nature.
-Keats.

மனித பருவங்கள்

வருட நீளத்தை நிறைக்கும் பருவங்கள் நான்கு
மனித மனங்களில் உண்டு பருவங்கள் நான்கு
தெளிவான புத்தி அழகத்தனையையும் அனாயாசமாய்
உள்வாங்கும் துடிப்பான வசந்தமுண்டு அவனுக்கு
பாதி செரித்த உணவாய் இளமை நினைவு தேனூறிக்கிடக்க
பசுவினைப் போல் சுகமாயதை அசைபோட விரும்புகிறான்
அவனுக்கு வாய்த்த வேனிற்காலத்திலே
உன்னத கனவிதில் கிடப்பதனால்
சொர்க்கத்தின் பக்கத்திலிருக்கிறான்
தனது இறக்கைகளை மடித்து
இளைப்பாறும் இலையுதிர்காலத்திலே
அமைதியான நீர் வளைவுகளை
கொண்டிருக்கும் அவன் ஆன்மா
மேகங்களைப் பார்த்துக் கொண்டு
சோம்பியிருப்பதும் நல்லவற்றை
வாசற்படியை ஒட்டியோடும் ஓடையைப் போல்
கடந்துசெல்லட்டுமென கவனியாதிருப்பதும்
போதுமென்று நிறைந்திருக்கும் மனது
சோகையான அலங்கோலமாய்
பனிக்காலமும் அவனுக்குண்டு இல்லையேல்
மனிதனென்ற அடையாளத்தையன்றோ
அவன் இழந்திருப்பான்

Tuesday, August 9, 2011

புதிர்

IndiBlogger - The Indian Blogger Community
போடா என்றால் வாடா
வஞ்சியின் அகராதி
அது மட்டுமா தனி
ஆழம் காணா கடல்
முத்தும் பவளமும்
சுறாவும் சிறுமீனும்
குவிந்திருக்கும் சுரங்கம்
எட்டாத தொடுவானம்
படைப்பின் அதிசயம்
விடை கண்டிடாத புதிர்

அசைபோட

IndiBlogger - The Indian Blogger Community
அசைபோட அவகாசமிருக்கு
வெள்ளி முடி வந்த பிறகு
அவசரமாய் உணவை உண்ணும் பசு
பின்னர் நான்கு அறை வயிற்றிலிருந்து
மீண்டும் அதை வாய்க்கு கொணர்ந்து
மெதுவாய் மென்று அதை விழுங்கி
செரித்து நலம் பெறுவது போலவே
அவசரமாய் உண்ட இளமையை
வசந்தகால தேன் உணவை
பனிகாலத்தில் அசைபோடும்
சுகத்தை ஆங்கில கவி கீட்ஸ்
அழகாய் சொன்னான் மனித வாழ்வை
இயற்கையின் நான்கு பருவமாக்கி
மறக்க முடியா ஓர் கவிதையில்

Monday, August 8, 2011

மேலதிகாரி

IndiBlogger - The Indian Blogger Community
செல்லவும் முடியாமல்
நிற்கவும் முடியாமல்
என்ன ஒரு அவதி இது
அவரோ என் மேலதிகாரி
தொலைபேசிக்கொண்டேயிருக்கும்
ரொம்ப முக்கிய பொறுப்பு
கொட்டாவியை அடக்கிவிட்டு
கற்பனை குதிரையை தட்டி
அவர் நாற்காலியிலெனை இருத்தி-
ரொம்ப சுகமாய்த்தான் இருக்கு

Sunday, August 7, 2011

நரகம்

IndiBlogger - The Indian Blogger Community
அழுக்கு இவ்வளவு அழுத்தமாய் பதிந்துள்ளதா
பதறுது பாவி மனம் பத்திரிக்கை படிக்கையில்
எத்தனை வக்கிரம் விசித்திரம் விகாரம் வன்மம்
அறுபது வயதில் பிள்ளைப் பெற்று பூரிக்கும் பாட்டி
அரசு தொட்டிலில் அநாதையாய் பிஞ்சு சிரிக்கும் படம்
பதவி நாற்காலியை உடும்பாய் பற்றிய ஊழல் மந்திரி
காதலனுடன் சேர்ந்து பெண் கணவனை செய்த கொலை
சிறுமியை கெடுத்த சாமியார்- உளதோ வேறு நரகம்

Wednesday, August 3, 2011

வேலை

IndiBlogger - The Indian Blogger Community
பிரமை பிடித்து சும்மா உட்கார்ந்திருக்காதே
உன்னை நம்பி இங்கே பல பணிகளிருக்கே
எடு சவக்காரத்தை கிளம்பு வான் மேலே
முதல் வேலை சந்திரனை சலவை செய்வதே

Tuesday, August 2, 2011

எல்லை

IndiBlogger - The Indian Blogger Community
இன்று வரை குறையில்லை
தூங்காமல் ஏங்கவில்லை
பிடிபடாமல் பறக்கவில்லை
வலிகள் கொல்ல முடிந்ததில்லை
சில கனவாவது பொய்க்கவில்லை
பேராசை என்றும் இருந்ததில்லை
விதியுடன் சண்டை போடவில்லை
வீணாய் மண்டை உடையவில்லை
எனக்கென வகுத்த ஓர் எல்லை
அதற்குள் நான் தோற்கவில்லை
IndiBlogger - The Indian Blogger Community