Tuesday, March 2, 2021

கரை ஏறும் தீவுகள்

IndiBlogger - The Indian Blogger Community சுற்றிலும் கடல் சூழ்ந்திருக்க
சுகமாய் கிடந்த தீவுகள்
பத்திரமாய் பரிசுத்தமாய்
ஆபரணமாய் ஆதாரமாய்
ஆனந்தமாய் ஆதுரமாய்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அகழியென பாதுகாக்க
பொலிவுடன் புவி காத்த
தாய்மை பீடங்களின்று
கரை ஏறும் தீவுகள்

உயிரே


சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து
வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து
கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து
எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து
புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து
களங்கள் கடந்து கனவாய் கரைந்து
இறகுகள் முளைத்து இலகுவாய் பறந்து
நினைவுகள் நிலைக்க அகலும் உயிரே
IndiBlogger - The Indian Blogger Community