Tuesday, March 2, 2021

உயிரே


சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து
வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து
கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து
எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து
புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து
களங்கள் கடந்து கனவாய் கரைந்து
இறகுகள் முளைத்து இலகுவாய் பறந்து
நினைவுகள் நிலைக்க அகலும் உயிரே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community