Sunday, February 28, 2021

இயற்கை நியதி

IndiBlogger - The Indian Blogger Community மாசி மாசமிதில்
வேப்பமரத்தடியில்
கூடை கூடையாய்
கொட்டிக்கிடக்கு
காய்ந்து உதிர்ந்த
சருகான இலைகள்
அன்னாந்து பார்த்தால்
அனைத்து கிளையிலும்
குச்சி நுனியிலும்
கொழுந்து இலைகள்
சித்திரையில் நிச்சயம்
காற்றில் நிறையும்
வேப்பம்பூவின் நறுமணம்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
மரபென உணர்த்தி
இறப்பவர் இறக்க
பிறப்பவர் பிறக்க
இயங்குது அழகாய்
இயற்கை நியதி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community