Friday, September 25, 2020

என் அஞ்சலி

IndiBlogger - The Indian Blogger Community

பாடப் பிறந்தேன்

சிறகை விரித்தேன்

வானை வளைத்தேன்

என் இசை கொம்புத் தேன்

குழைந்தேன் கொஞ்சினேன்

இழைந்தேன் இளகினேன்

சிரித்தேன் சீண்டினேன்

சித்து வேலை செய்தேன்

இதய நரம்பை மீட்டினேன்

எல்லா உணர்வும் தொட்டேன்

தட்டி எழுப்பினேன் உற்சாகத்தை

தாலாட்டி உறங்க வைத்தேன் சோகத்தை

எழு ஸ்வர நாயகன்

நாத பிரம்ம வித்தகன்

இசையின் ரசிகன்

இமாலய சாதகன்

அடித்தேன் என்றும் ஆனந்த கும்மி

யாரோடும் சேரும் ஜோரான ரம்மி

திகட்டாத ராகங்கள்

தெய்வீக பாவங்கள்

தீராத விருந்துகள்

வற்றாத அருவிகள்

 

மூச்சு விடாமல் பாடினேன்

முழு வானை கடந்துவிட்டேன்

களைத்த சிறகை மூடுகிறேன்

களிப்புடனே தூங்கப்போகிறேன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community