Monday, October 31, 2011

குரங்கு

IndiBlogger - The Indian Blogger Community
குரங்கும் அதன் குறுகுறு கண்களும்
குட்டியை கவ்விச் செல்லும் பாங்கும்
தவழும் நீண்ட அழகிய வாலும்
மெத்தென்ற சிறு கைவிரல்களும்
கூட்டமாய் வாழும் ஓர் ஒழுங்கும்
ஈர்க்கும் சங்கதிகள்தான் எத்தனை

Tuesday, October 25, 2011

பண்டிகை

IndiBlogger - The Indian Blogger Community
காலம் காற்றாய் அல்லவோ பறக்கிறது
குட்டிப் பெண் அன்று பட்டுப்பாவாடையில்
பாட்டி வீட்டில் செட்டுப் பிள்ளைகளுடன்
கொட்டமடித்தது அதிரச இனிப்பு
குமரியாய் உறவுகளை சந்தித்த
கொண்டாட்டம் குலாப்ஜாமுன் தித்திப்பு
மறுவீடு சென்று இரு வீட்டு சீராடியது
மனம் நிறைந்த மைசூர்பாகின் சுவை
மக்களைப் பெற்று அவர் ருசிக்குக் கிளறியது
மங்காத மகிழ்ச்சி தரும் பாதாம் அல்வா
பேரப்பிள்ளைகள் கொறிக்க முறுக்கும் மிக்சரும்
பேரின்பம் தரும் போளியும் பாதுஷாவும்
அக்கரையிலும் தொலைதூர பணியிடங்களிலும்
மக்கள் இன்று - மாட்டிக்கொண்டோம் தனித்தீவில்
கடையில் வாங்கிய பலகாரம் போதுமென
அக்கம் பக்கம் பகிர்ந்துண்டு அருகிருக்கும்
பழுத்த மர நிழலில் சற்றே ஆசுவாசம்
பெற்றவரை பார்த்து ஆசி பெறுதல் பணியாரம்
பண்டிகை கொண்டாடியதாய் நீயும் இன்று
பேர் பண்ணிக்கொள் மனமே வேணாம் பேராசை

Sunday, October 23, 2011

என் இடத்தை

IndiBlogger - The Indian Blogger Community
மிகவும் யோசித்து
மிகவும் தயங்கி
மிகவும் மென்மையாய்
மீட்டேன் என் இடத்தை

Thursday, October 20, 2011

தலைவலி

IndiBlogger - The Indian Blogger Community
பெரிது என்பது எது
சிறிது என்பது எது
பெரிதென நினைத்த கோடு
சிறிதாகும் அதை விட
பெரிய கோடு அருகில் வர
பெரிதும் சிறிதும் மாறும்
சூழ்நிலைக்கு தக்கபடி ஆயினும்
தலைவலி தலைவலிதானே

Wednesday, October 19, 2011

பொருத்தம்

IndiBlogger - The Indian Blogger Community
புகைப்படத்தில் பார்த்த பின்பு
ஜாதக பொருத்தமும் அறிந்து
சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிடச் சென்று
பாடச்சொல்லி கேட்டு பலருமாய்
சிலபல லௌகீக பேரங்கள் நடத்தி
மண்டபமும் தேதியும் முடிவாகும்
காலம் கடந்துவிட்டதோ இனி
பெரியவர் வேலை முடிந்துவிட்டதோ
இணையமும் கல்லூரிசாலைகளும்
இணைந்து இயங்கும் பணியிடங்களும்
மாலும் காபிஷாப்பும் டிஸ்கோவும்
மாலை சூட பொருத்தம் காட்டுமோ

Monday, October 10, 2011

காவியக் கதை

IndiBlogger - The Indian Blogger Community
மயில்கள் ஆடும் அழகிய வனத்திலே
மலர்ந்த மங்கை பெயரும் சகுந்தலை
மகிழ்ந்தாடிய கலாப காதலன் மன்னன்
விளைந்தது பாரத விருட்சத்தின் விதை
மறந்துவிட்டான் கொடுத்த கணையாழியை
மீனின் வயிற்றில் மறைந்திருந்ததந்த சாட்சி
மறதி விலகும் காலம் வந்ததும் மங்களம்
காளிதாசன் வரைந்திட்ட காவியக் கதை

Sunday, October 9, 2011

பாக்கியம்

IndiBlogger - The Indian Blogger Community
இளமையாய் மனசிருக்கு
எண்ணத்தில் துள்ளலிருக்கு
ஆனாலும் என்ன செய்ய
சபையில் நுழையும்போது
முடியில் பரவிய நரையும்
முகத்தில் முதிர்ச்சியும்
முன் வந்து கிழவியென
கட்டியம் கூறுதே
ஆயின் சில நொடி பேச்சில்
தெளிவாய் புரிந்துவிடும்
கிழவியல்ல குமரியென
இன்னும் கூட குழந்தையென
குறை தீர்ந்திடுமெனக்கு
போதும் இந்த பாக்கியம்

Friday, October 7, 2011

வாடிக்கை

IndiBlogger - The Indian Blogger Community
பதில் வந்தது அம்பாய்
சுவற்றில் அடித்த பந்தாய்
கேட்டிருக்க வேண்டாமோ
காலங்கடந்து வந்த ஞானம்
முடியில்லா தலைக்கு சீப்பு
இதுதானே இங்கு வாடிக்கை

Tuesday, October 4, 2011

குறும்பாய்

IndiBlogger - The Indian Blogger Community
மாமி நான் மாமாவின் மடியில் அமர்வதை தடுக்கமாட்டாயே
மணப்பெண்ணிடம் குறும்பாய் கேட்ட போது கோபம் வரவில்லை
வாழ்த்துமடலில் அப்படி விண்ணப்பித்தவள் வேறு யாருமில்லை
அருமை நாத்தனாரின் அழகிய மூன்று மாதக் குழந்தைதானே

Sunday, October 2, 2011

பரவசம்

IndiBlogger - The Indian Blogger Community
பிரமையில் நானோ
பகல் கனவுதானோ
பிறந்த பலனிதுவோ
பொற்காலமிதுவல்லவோ
பாரெங்கும் நல்லொழுக்கம்
பகையில்லா நெருக்கம்
பார்த்தாலே பரவசம்
பாலில் விழுந்தது பழம்

காதல்

IndiBlogger - The Indian Blogger Community
நாக்குதான் குழறியது
வாய் கூட உளறியது
கவிதை மறந்துபோனது
காதல் பறந்தேபோனது
கயவனுடன் பார்த்தபோது
கற்பனை நொறுங்கியது
IndiBlogger - The Indian Blogger Community