மயில்கள் ஆடும் அழகிய வனத்திலே
மலர்ந்த மங்கை பெயரும் சகுந்தலை
மகிழ்ந்தாடிய கலாப காதலன் மன்னன்
விளைந்தது பாரத விருட்சத்தின் விதை
மறந்துவிட்டான் கொடுத்த கணையாழியை
மீனின் வயிற்றில் மறைந்திருந்ததந்த சாட்சி
மறதி விலகும் காலம் வந்ததும் மங்களம்
காளிதாசன் வரைந்திட்ட காவியக் கதை
No comments:
Post a Comment