Tuesday, October 25, 2011

பண்டிகை

IndiBlogger - The Indian Blogger Community
காலம் காற்றாய் அல்லவோ பறக்கிறது
குட்டிப் பெண் அன்று பட்டுப்பாவாடையில்
பாட்டி வீட்டில் செட்டுப் பிள்ளைகளுடன்
கொட்டமடித்தது அதிரச இனிப்பு
குமரியாய் உறவுகளை சந்தித்த
கொண்டாட்டம் குலாப்ஜாமுன் தித்திப்பு
மறுவீடு சென்று இரு வீட்டு சீராடியது
மனம் நிறைந்த மைசூர்பாகின் சுவை
மக்களைப் பெற்று அவர் ருசிக்குக் கிளறியது
மங்காத மகிழ்ச்சி தரும் பாதாம் அல்வா
பேரப்பிள்ளைகள் கொறிக்க முறுக்கும் மிக்சரும்
பேரின்பம் தரும் போளியும் பாதுஷாவும்
அக்கரையிலும் தொலைதூர பணியிடங்களிலும்
மக்கள் இன்று - மாட்டிக்கொண்டோம் தனித்தீவில்
கடையில் வாங்கிய பலகாரம் போதுமென
அக்கம் பக்கம் பகிர்ந்துண்டு அருகிருக்கும்
பழுத்த மர நிழலில் சற்றே ஆசுவாசம்
பெற்றவரை பார்த்து ஆசி பெறுதல் பணியாரம்
பண்டிகை கொண்டாடியதாய் நீயும் இன்று
பேர் பண்ணிக்கொள் மனமே வேணாம் பேராசை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community