Saturday, October 15, 2016

கவலை மறந்திடுவீர்

IndiBlogger - The Indian Blogger Community சிறந்திடுவீர் பறந்திடுவீர் கவலை மறந்திடுவீர்
சின்ன சின்ன கண்ணோட்ட மாற்றங்களால்
சமாளிக்கத் தெரிய வேண்டும் என்கின்றனர்
சிரித்து சிந்திக்க வைக்கும் அறிவுரைகளால்
சிக்கலும் தொல்லைகளும் வாட்டும் போது
சமைந்து சிலையாய் நின்று விட வேண்டாமே
சற்றே நோக்குங்கள் சுறுசுறுப்பான அந்த நாயை
சிக்கிய பண்டத்தை உருட்டியது புரட்டியது பின்
சீ சீ தின்ன லாயக்கில்லை எந்த பலனுமில்லையென
சீந்தாது சென்றது அதன் மேல் சிறுநீர் பெய்துவிட்டு

Friday, October 14, 2016

தீபாவளி

IndiBlogger - The Indian Blogger Community எண்ணங்கள் ஒளிரவும்
வண்ணங்கள் மிளிரவும்
வருகிறது விரைவில் தீபாவளி
வழக்கமான புலம்பல் கேட்கிறது
வெடிக்காதீர் பட்டாசுகளை
கொளுத்தாதீர் மத்தாப்பூ
பாழாகிறது சூழல் மாசினால்
பொய்யாய் வருந்துகிறார்
வீட்டுக்கொரு வாகனம் 
விடும் புகை தெரியவில்லை
நிரம்பின நீர்நிலைகள்
நீரையிழந்து மக்கா குப்பையால்
நோகாமல் தூக்கி எறிந்த
நெகிழி பைகள் கோப்பை தட்டுகளால்
கர்வமாய் உயர்ந்த கட்டிடங்கள்
வெட்டி வீழ்த்திய ஏராள மரங்கள்
கட்டிய கைபேசி கோபுரங்கள்
ஒழிந்தன பறவைகள் வீடுகள்
தயங்கவில்லை குழந்தைகளுக்கு 
குப்பையான துரித உணவு ஊட்ட
மாகி, பெப்சி, கோக், சிவப்பு கோழிக்கறி
எண்ணவில்லை கேடு விளைவிக்கும்
விஷமான பொருட்கள் நிறமிகள்
உள்ளே தடையின்றி செல்வதை
மறக்குது பாரம்பரிய கொண்டாட்டங்கள்
மறையுது ஆரோக்கிய பழக்கங்கள்
விழுங்குது நம்மை ஐபோனும் ஆண்ட்ராய்டும்
மாசாக்குவதோடு காசும் கரியாகுதாம்
ஜவுளிக்கடை நகைக்கடை விஜயம் 
நினைவுக்கு வரவில்லை சிவகாசியில் 
பிழைக்கும் எண்ணற்ற ஏழைகளும்தான்
அந்நிய பொருள் மோகத்தை கொளுத்தி
கலப்பட வாணிபத்தை சாம்பலாய் எரித்து
கள்ளமில்லா எளியோரை வாழவைப்போம்
யூனிசெஃப் வாழ்த்துமடல் அனுப்புவோம்
அர்த்தமுள்ள ஆனந்தமான பண்டிகையை
அழகாக அமர்க்களமாய் கொண்டாடுவோம்

Thursday, October 13, 2016

மாணவன்

IndiBlogger - The Indian Blogger Community மாணவன் அவன் என்றென்றும்
மாலை சூடிய நாள் முதல்
மண்ணுக்குள் போகும் வரை
மனையாளை படிக்கிறான்
முடியாத பாடத்திட்டமது
முடிவதே இல்லை பொருள் புரிய
முரண் நிறைந்த அகராதியில்
முணுக்கென்று கோபமும்
முறுவலுடன் கொஞ்சலும்
முன்னறிவிப்பில்லா வானிலைகள்
முழம் பூ போதுமாயிருக்கிறது
முத்துமணி மாலைகளும் கூட
மூலையில் வீசப்படும் சமயமுண்டு
முழி பிதுங்கி நிற்பதுண்டு
முன்னே போனால் முட்டு
முடங்கிப்போனால் குட்டு
முழுதாய் புரிந்ததே இல்லை
மதிப்பெண் பெற்றிட போராட்டம்

Saturday, October 8, 2016

பெண்ணியத்தின் ஒளி

IndiBlogger - The Indian Blogger Community திருவினையாக்கும் முயற்சியிங்கு கண்டே
திகைத்தேனே திருதிருவென விழித்தேனே
அடைத்து வைத்த பெண்ணிற்கு விடுதலை
தேடினான் மீசையும் முண்டாசுமாய் ஒரு கவி
உடைத்துவிட சொன்னான் மூட பழக்கங்களை
இருட்டிய பின் வெளியே செல்லலாகாது பெண்
இந்த சட்டத்திற்கு மாற்றி யோசித்த கூட்டம்
இருட்டிய பின் ஆணை வீட்டில் அடை என்று
இன்றொரு ஆணை இடுவதில் முனைப்பானால்
இருண்டு போகாதோ பெண்ணியத்தின் ஒளி
Inspired by a post from "The Indian Woman-A perfect blend of modernity and tradition":'You say we shouldn't go out after dark? Why not lock men indoor after 7pm instead?'

Tuesday, October 4, 2016

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
சிறுமையாலா கவிதைக்கருவாய்
ஏடுகளில் பாடுபொருளாய் ஆனாய்
தன்னிகரிலா தனிப்பிறவியே தனமே
மாதரசியே மாபெரும் சக்தியானவளே
மாண்புகளின் மொத்த அவதாரமே
மலை மேல் பிறந்து குதித்தோடி
காடும் வயலும் தாண்டி களைக்காது
வழியெங்கும் வளம் இரைத்தபடி
இலக்கை அடைந்தாய் இறுதியாய்
ஆழ்கடலில் சங்கமித்தாய் கரைந்தாய்
கங்கையே உவப்புடன் இனிப்பிழந்தாய்
உப்பாய் மாறிப்போனாய் ஏற்றாய்
மணவாளன் அடையாளத்தை
சரணாகதியிதுதானோ சொர்க்கம்

Monday, October 3, 2016

பெண்ணின் பெருமை

IndiBlogger - The Indian Blogger Community
யாருக்கும் பொருட்டில்லை பெண்ணின் பெருமை
தனியாய் அவள் மதிப்பு தெரியவில்லை அன்று
தெரியவிடவில்லை நம் ஆணாதிக்க சமுதாயம்
கொழு கொம்பை பின்னிப்படரும் கொடியவளென்று
தந்தை கணவன் மைந்தனென என்றும் ஆண்மகனை
சார்ந்தேயிரு என்றான் மனு பரம்பரையாய் தொடர்ந்த
மூளைச்சலவையில் மயங்கி மழுங்கி மங்கி மங்கை
சுய பலமறியாது அடிமையாய் கிடந்த காலம் முடியுது
ஆளில்லா கோட்டையில் அரக்கனால் சிறைப்படுத்தி
வாடிய அரசகுமாரி ஆண்டாண்டு காலம் காத்திருந்தாள்
அரசகுமாரன் வந்து விடுவிக்க என்று கதை சொன்னால்
இன்றைய குட்டிப்பெண் அலுத்துக்கொள்கிறாள் அழகாக
அரக்கனை சாமர்த்தியமாய் சமாளித்து வெல்லாமல்
அயலான் உதவிக்கு வர காத்திருப்பது மடமை என்று
பிறந்துவிட்டது புது யுகம் பொலிவுடன் விழித்தெழுங்கள்
பொல்லாத சாத்திரத்தை கதைகளை மாற்றி எழுதுங்கள்
IndiBlogger - The Indian Blogger Community