Tuesday, October 4, 2016

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
சிறுமையாலா கவிதைக்கருவாய்
ஏடுகளில் பாடுபொருளாய் ஆனாய்
தன்னிகரிலா தனிப்பிறவியே தனமே
மாதரசியே மாபெரும் சக்தியானவளே
மாண்புகளின் மொத்த அவதாரமே
மலை மேல் பிறந்து குதித்தோடி
காடும் வயலும் தாண்டி களைக்காது
வழியெங்கும் வளம் இரைத்தபடி
இலக்கை அடைந்தாய் இறுதியாய்
ஆழ்கடலில் சங்கமித்தாய் கரைந்தாய்
கங்கையே உவப்புடன் இனிப்பிழந்தாய்
உப்பாய் மாறிப்போனாய் ஏற்றாய்
மணவாளன் அடையாளத்தை
சரணாகதியிதுதானோ சொர்க்கம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community