முன் நடந்தான் நெஞ்சு நிமிர்த்தி ஆடவன்
அவன் பின் குனிந்து நடந்தாள் பெண்மணி
நூற்றாண்டுகள் பல சென்றன இப்படியே
நாகரிகம் நல்லெண்ணம் சமத்துவம் தோன்ற
தோளோடு தோளாய் சேர்ந்து இருவரும் நடக்க
மேலும் உருண்டன வேகமாய் வருடங்கள் பல
புலியாய் பாய்கிறாள் முன்னேறிய பெண்ணின்று
பூனையாய் பம்மிக்கொண்டு பின்னால் ஆண்மகன்
வட்டம் முடிவது துவக்கப் புள்ளியில் அறிவோம்
பெண்ணே உடைப்பாயோ பழைய சித்தாந்தம்
புதிதாய் படைப்பாயோ நிகரில்லா சரித்திரம்
No comments:
Post a Comment