அழுக்கு இவ்வளவு அழுத்தமாய் பதிந்துள்ளதா
பதறுது பாவி மனம் பத்திரிக்கை படிக்கையில்
எத்தனை வக்கிரம் விசித்திரம் விகாரம் வன்மம்
அறுபது வயதில் பிள்ளைப் பெற்று பூரிக்கும் பாட்டி
அரசு தொட்டிலில் அநாதையாய் பிஞ்சு சிரிக்கும் படம்
பதவி நாற்காலியை உடும்பாய் பற்றிய ஊழல் மந்திரி
காதலனுடன் சேர்ந்து பெண் கணவனை செய்த கொலை
சிறுமியை கெடுத்த சாமியார்- உளதோ வேறு நரகம்
No comments:
Post a Comment