கடவுளே உமக்கு சுக்கிர தசையோ
மக்களை வசியம் ஏதும் செய்தீரோ
நாளென்றும் கிழமையென்றும் புதுசாய்
பகலிலும் இரவிலும் அலங்காரமாய்
சந்து முக்கிலும் மலை உச்சியிலும்
ஊர் எல்லையிலும் கடைத்தெருவிலும்
எல்லா பெரிய சிறிய கோவில்களிலும்
பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடுதே
தொடரும் புதுப் புதுக் கேளிக்கையிடை
மனங்கள்தான் பழுத்த மர்மமென்ன
No comments:
Post a Comment