ஆரம்பம் எதுவென தெரியாமல்
அப்பாவி கணவன் தடுமாறுகிறான்
நிர்மலமான வானம் ஏன் கருத்தது
கடகடவென ஏன் இடித்தது
பளீரென ஏன் மின்னியது
கனமழை ஏன் கொட்டியது
பெண்ணிவள் புயலா பூகம்பமா
என்ன பிழை நான் செய்தேன்
குறை ஒன்றும் கூறவில்லை
வாதமும் புரியவில்லை
தடை ஏதும் சொல்லவில்லை
ஒன்றுமே புரியவில்லையே
இன்று நேற்றல்ல பல மாதம்
கடந்தும் கனன்று கொண்டிருக்கும்
என்றோ பேசியது செய்தது
எரிமலையை ஆராய்ந்து பயனுண்டோ
No comments:
Post a Comment