Saturday, March 20, 2010

சுவடு

காலக்கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் நேரம்
அலையலையாய் மனதில் எத்தனை சந்தேகம்
வானத்தில் தினம் வந்து போகும் சூரியசந்திரர்
நடந்த சுவடேன் தெரிவதில்லை பதியவில்லை
கரையை தொட்ட அலை எத்தனாவது அலை
அதற்கேன் அடையாளமில்லை வயதில்லை
கண்ணுக்கு மாற்றம் தெரியாதிந்நியதியிலே
வரலாற்றுப் பாதையிலே மனிதன் மட்டும்
எறும்பூறிய கல்லாய் காலடிச்சுவட்டினை
அழுந்தப்பதித்ததென்னே காரணமென்னே
ஏற வேண்டும் வாரிசுகள் ஏணியுச்சிக்கு
ஏற்றமிங்கு காண வேண்டும் மனிதகுலம்
ஒழியவேண்டும் மடமையும் சிறுமையும்
ஒழுக்கத்தின் பாதையில் ஒழுக வேண்டும்
சுகமும் சுபிட்சமும் நடுநிலை தராசிலே
ஏழ்மையில்லா நாள் இனி வரும் உலகிலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community