Sunday, March 21, 2010

புரட்சி

காலமும் ஓடுது புரவி கட்டிய ரதமாய்
சகடங்கள் உருளுது கற்கள் பொடிபட
சங்கடங்கள் புரளுது பூகம்பங்களாய்
சந்ததிகள் மாறுது புரட்சிகரமாய்

கொண்டையை சிலுப்பி கர்வமாய்
கோழிகளை மேய்க்கும் சேவலே
என் கொக்கரிப்பை கொஞ்சம்
பாரடா என்றது பெட்டைக் கோழி

பொல்லாத தோகையை விரித்து
ஆணவமாய் ஆடும் ஆண்மயிலே
அகங்காரம் எனக்குமுண்டு என்
அகவலை கேளேனென்றது பேடை

பிடரியை சிலிர்த்து வீரமாய் கர்சிப்பாய்
வேட்டையாடி நான் கொடுக்க உண்பாய்
வேடிக்கைப் பார்த்து நிற்பாய் நான் பேணிட
நானும் சுகமாய் திரிவேனென்றது சிங்கராணி

திமிலோடு திமிர் வளர்த்த பொலிகாளையே
கொம்பையாட்டி குளம்பால் மண் உதைப்பாய்
கட்டிய பசு நான் இன்று கட்டவிழ்த்தேன்
என் எக்காளம் எப்படியென்று கேட்டுக்கொள்

தொல்லையில்லா தூரத்தில் நிலவுப்பாட்டி
தொலைநோக்காய் கீழே பார்க்கிறாள்
தாடையிலே கை வைத்து வியக்கிறாள்
கோராமையென்னயிது பூலோகத்திலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community