Thursday, March 18, 2010

மெய்

தானாய் யாரும் பிறப்பதில்லை
மெய்யிதுதான் பொய்யில்லை
மெய்யும் மெய்யும் கலந்ததினால்
மெய்யொன்று புதிதாய் உதிக்க
சந்ததி தொடரும் சங்கதியில்
புதிதாய் புரிந்திட யாதுமில்லை
புதிராய் அதிலே ஏதுமில்லை
பொய் வேடம் புனையும் மெய்யொன்று
புதுப்பூ ஒவ்வொன்றும் பூக்கும் போது
புதிதாய் உலகம் பிறந்தது போல்
உவகை உள்ளே ஊறி பொங்குதே
முதல் முறை போன்றே கிறங்குதே
சின்ன சீவனின் சிறு அசைவும் கூட
அலுக்காத அதிசயமாய் ஆவதென்னே
பழசே ஆகாத இப்புதுமையென்னே
சின்னக்கையை ஆட்டி சின்னக்காலை உதைத்து
சின்ன வாயை திறந்து பெரிதாய் அழுதபோது
பிறக்கின்ற பேரின்பத்திற்திங்கு நிகரேது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community