Saturday, March 20, 2010

வசமாக்கினாள்

வசமாக்கினாள் என்னை முழுதுமாய் தன்னிடம்
வசியம் என்னை செய்துவிட்டாள் என்றைக்கோ
இருப்புக்கொள்ளாமல் நானிங்கு தவிக்கிறேன்
இனிய இம்சைப் படுகிறேன் படுக்கையறையில்
இரவும் வந்து வெகு நேரமானது அப்பொழுதே
இல்லாள் என்னருகே வரத்தான் ஏன் தாமதமே
பாசாங்கவள் செய்கிறாள் பறந்து திரிகிறாள்
எதையோ எடுக்க வைக்க உள்ளே வருகிறாள்
அடுத்த நொடியே விரைந்து வெளியே ஓடுகிறாள்
கள்ளிக்கு கைவைந்தது இந்த சாகச காரியம்
முள்ளின் மேல் என்னை கிடத்திடும் நாடகம்
சாக்கு போக்கு தானே நன்கு சொல்கிறாள்
கைக்கு எட்டாமல் இப்படியேன் கொல்கிறாள்
மல்லிகை மணத்தை விட்டுச் செல்கிறாள்
மஞ்சத்தில் எனை பாராமல் போகிறாள்
தேவதையவள் அங்குமிங்கும் நடக்கிறாள்
தேய்ந்து நெருங்கி கொலுசொலி கேட்கிறது
காத்துக் காத்து தவிக்கிறேன் தாபத்திலே
வெட்டியென்ன முறிக்கிறாள் இந்நேரத்திலே
அப்பாடா வந்தேவிட்டாள் என்னருகிலே
அணைக்கிறேன் தொலைகாட்சியையும்
காத்திருந்து கனிந்த கனிச்சுவையறியாத
காமுகன் "கன்னி"யை தின்னும் காட்சியை
முட்டாள் பெட்டிக்குள் மூடி முழுகினேனே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community