Thursday, March 18, 2010

அத்வைதம்

நானும் நீயும் போட்டியிட்டோம்
நாளும் கிழமையும் தொடர்ந்து
நடுப்பகலில் சளைக்காமல்
நள்ளிரவில் தலை சாய்க்காமல்
நாகமும் சாரையுமாய் சீறினோம்
நகமும் சதையுமாய் சேர்ந்தோம்
வடக்கும் தெற்குமாய் வாழ்ந்தோம்
காந்தத் துருவங்களாய் ஈர்த்தோம்
களைக்காமல் போரிட்டோம்
களிப்போடு கை கோர்த்தோம்
ஆண்டுகள் இத்தனை உருண்டு
அனுபவங்கள் பற்பல கண்டு
நம் நன்மக்கள் பார்வையில்
துவைதம் தொலைத்து
அத்வைதம் விளக்கி
அம்மையப்பர் ஆனோமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community