Saturday, March 20, 2010

இன்பம்

இருக்கும் இடம் அறியாரே அலைகின்றார்
இன்பம் இருக்குமிடம் அவரவர் கொல்லையிலே
குலைகுலையாய் காய்த்திருக்கு கனிந்திருக்கு
குதூகலம் அங்கே குளிர்ச்சியாய் நிறைந்திருக்கு
வேப்பம்பூமணமாய் மகிழம்பூமணமாய் காற்றிலே
வேறு யார் வேண்டும் உயிர் கலந்த உறவைத்தவிர
சொந்தமும் பந்தமும் சுமக்க இரு தோளிருக்க
சொர்க்கம் போலொரு சுகம் அங்கு நிரந்தரம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community