Saturday, March 20, 2010

முதுமையில் சுமை

தேய்ந்து தேய்ந்து வளர்ந்து வளர்ந்து
அன்றும் இன்றும் அதே நிலா
அதைக் காட்டி அன்னம் ஊட்டி
வளர்த்திட மாதொருத்தி கையில்
பிள்ளைகள் அன்றும் இன்றும்
அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்
அவள் தோள்களோ இளம் மூங்கில்
இற்றை திங்கள் இவ்வெண்ணிலவில்
இற்றுப் பொடித்து வலுவிழந்ததுவே
மூட்டும் இடுப்பும் இளைப்பாற எண்ண
இளம்பெண்கள் ஏற்றிய சுமையில்
இக்கட்டொன்றில் நிற்பர் குமைந்து
பெற்றால் பாவம் பிறந்தால் பாவம்
கலிகாலத்தில் எது ரொம்பப் பாவம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community