Tuesday, March 16, 2010

வாழ்வே வரமா

அகராதியானவனே! அன்பான கணவனே!
என் கண் பேசும், இதழ் உதிர்க்கும்
வார்த்தைகளை வடிப்பவனே! வல்லவனே!
பொய் கலவா மெய்யை கண்டவனே!
மெய்யின் முழுமை தந்தவனே!
மெய்யில் பாதி ஆனவனே!
ஆதவன் ஒளியூட்டும் நிலவா?
ஆகாயம் பார்த்த நிலமா?
நெஞ்சில் நிறைந்த நினைவா?
அது நீயா? நானா? தனியா?
தனிமை தொலைத்த தவமா?
வாழ்வே என்றும் வரமா?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community