Thursday, March 18, 2010

மறுபடியும்

பாதம் பார்த்து நடந்தாள் பதவிசாக
முட்டவில்லை மோதவில்லை யார் மீதும்
தலை நிமிர்ந்து நடக்கிறாள் நம்பிக்கையோடு
தலை குனிவை தடுக்க உத்தரவாதமில்லை
பாதம் பார்த்தவன் பரிசம் போட்டதறிந்தான் அன்று
பார்க்கும் கண்ணுக்கு பொருட்டில்லை பிறன்மனை இன்று
சமைத்த முறை சரியில்லையோ சுவை இல்லையே
மறுபடியும் முயற்ச்சிப்போம் மணக்கும் ருசிக்காக

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community