Sunday, March 21, 2010

தர்மம்

காதா கண்ணா இரண்டிரண்டு
கேட்டிடு பார்த்திடு இருமடங்கு
காலா கையா இரண்டிரண்டு
கொடுத்திடு உழைத்திடு குறைவின்றி
வாயா அது ஒன்றே ஒன்று
அளவோடு உண்ணு பேசு
மூக்கு அதுவும் ஒன்று
நுழைக்காதே தேவைவயின்றி
மனம் ஒன்றாக இருக்கட்டும்
பல கருத்தையும் வரவேற்று
அமைதியும் உறுதியம் கொண்டு
தர்மம் சூதெனும் கிரகணத்தின்
வாய் சென்று வெளியேறும்
மங்காத ஒளியோடு தப்பாது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community