Thursday, March 18, 2010

வாய்

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
ஆயினும் நுணலும் தன் வாயால் கெடும்
தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு
வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி பிழைப்பதும்
தாயை சேயை உறவை வாழவைக்கத்தானே
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதில்லை
செவிக்குணவு இல்லாத போது மட்டும்
வாய்க்கு மெல்லும் வேலை தரவேண்டுமாம்
வாயை மூடிக்கொண்டிருந்தால் கலகமில்லை
வாரம் ஒர் நாள் நாளில் சில மணித்துளி
மௌனம் காத்தனர் மகாத்மாக்கள்
வாயை காத்து வளமாய் வாழ்வோமாக

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community