Sunday, March 21, 2010

ஏன்

லேசானது மனது
குளிந்த காலையில்
குயிலின் கூவலிலே
இதமான பகலிலே
மீண்டும் தேன் காதிலே
சிலிர்த்துப் போனேனே
ஏழாவது மாடி சாரத்தில்
ஏறி வேலை செய்பவன்
பிசிரின்றி பாடினான்
திடீரென தானாகவே
லயித்துப்பாடிய குரலில்
குழைவும் லயமும்
கூடவே பாவமும்
ஏன் பாடினான்
அலுப்பு மறக்கவா
அலுக்காத மறக்காத
உறவின் நினைவிலா
இசையின் ரசிகனாகவா
சில வரிகள் மட்டும்
பீரிட்டு வந்தனவோ
பின் நின்று போனதோ
ஏன் பாடினான்
பேருக்கும் புகழுக்கும்
பொருளுக்கும் இல்லை
நிச்சயமாய் இல்லை
மேடை முன்னமர்ந்து
ஆரவாரமாய் ரசிக்க
ஓர் கூட்டமுமில்லை
தானே ரசிகன்
தானே கலைஞன்
கூவும் குயில்
ஆடும் மயில்
சரஞ்சரமாய் மழை
நனைந்த மரங்கள்
சிரிக்கும் பூக்கள்
இனிக்கும் கனிகள்
எல்லாம் ஒரு ரகம்
அவனும் அந்த இனம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community