Thursday, March 18, 2010

மனம்

மனம் ஆகிடும் சொர்க்கமோ நரகமோ
மெல்லிய கோடுதானதை பிரிக்குமோ
மலர்களங்கு பூக்குமோ மணக்குமோ
முட்கள் மண்டி புதராய் கிடக்குமோ
மந்தமாருதம் தவழ்ந்து கொஞ்சுமோ
மின்னல் இடியோடு புயலடிக்குமோ
மாலைமதியின் மந்தகாசமிருக்குமோ
மருகி வேகும் பாலையாயிருக்குமோ
மறுமலர்ச்சி கொண்டுவர முயலுமோ
மடமையில் மூழ்கித்தான் கிடக்குமோ
மரியாதை மதிப்பென்று உயருமோ
மமதையில் அழுந்திக் கிடந்திடுமோ
மார்க்கம் அறிந்து முக்தியடையுமோ
மூடகத்தில் முடங்கிப் போகுமோ
மல்லி முல்லை பூத்த நந்தவனமாய்
மனிதராய் பிறந்தோர் மாற்றுவோம்
மாக்களலல்ல மாண்புடை பிறவிகள்
மறவாதிதை மரபாகக் கொள்வோமே

2 comments:

  1. ohhhhhwowwwww!! super writing on manam.....ellaa vitha manangalukum azhagaana arivuraigal aLLi thanthu irukeenga....thank u nga pp

    ReplyDelete
  2. Very heartening to have found an eager, discerning reader for my writings! Please continue your favour, suvai!

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community