Wednesday, March 17, 2010

நிலவு

கண்ணால் உன்னை காணாமல்
பிறையாய் தேய்ந்து போனேனே
காதில் உன் மொழி கேளாமல்
உப்பாய் கரைந்து போனேனே
தூது ஒன்றும் கிடைக்காமல்
கற்பூரம் போலாவி ஆனேனே
அருகில் உன்னை இருத்தாமல்
ஆவியை தொலைத்து விட்டேனே
இங்கு அருவமாய் ஆனவளை
வெறுங்கூடாய் போனவளை
தேடி நீ வருவாயோ?
தேவையை அறிவாயோ?
திரும்புமோ என் உயிரும்?
வளருமோ என் உருவும்?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community