Saturday, March 20, 2010

ரகசியம்

உண்டோ சுவை உடனே கிடைக்கும் கனியில்
காத்திருந்து கனிந்தது இன்னும் இனிப்பாகுமே
ரகசியம் இல்லா இடத்தில் ஆர்வம் தீர்ந்திடுமே
இலைமறை காய்மறை தூண்டும் துடிப்பினை
வெட்டவெளிச்சமாய் காட்டியது எட்டுமோ
பொத்திப் பொத்தி வைத்ததெல்லாம் பொன்னே
மோகம் முடியும் கதையல்ல புதையல்தானே
மர்மத்தால் அதை மூடி காத்திடு பெண்ணே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community