கடந்து வருவேன் காலங்களை
நடந்து வருவேன் ககனவெளியில்
அமுதத்தை அறிந்தபின்னே
அருந்துவேனோ அமிலத்தை
பித்தம் பிடித்தது எனக்கு
பிடித்தம் இருக்கு உனக்கு
சித்தம் சிலிர்த்துத் போகுது
சிதறாமல் உண்ணச் சொல்லுது
அடங்காத ஆர்ப்பரிப்பிது
அடக்காத ஆவேசமிது
விலங்காய் மாறாமல்
விலங்கை மாட்டாமல்
விருந்தை முடிக்காமல்
வருவேன் நான் உன்னோடு
தருவேன் மீதி பிறவிகளை
தருவாய் உன் ஆயுட்களை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment