Monday, March 15, 2010

தருவேன்

கடந்து வருவேன் காலங்களை
நடந்து வருவேன் ககனவெளியில்
அமுதத்தை அறிந்தபின்னே
அருந்துவேனோ அமிலத்தை
பித்தம் பிடித்தது எனக்கு
பிடித்தம் இருக்கு உனக்கு
சித்தம் சிலிர்த்துத் போகுது
சிதறாமல் உண்ணச் சொல்லுது
அடங்காத ஆர்ப்பரிப்பிது
அடக்காத ஆவேசமிது
விலங்காய் மாறாமல்
விலங்கை மாட்டாமல்
விருந்தை முடிக்காமல்
வருவேன் நான் உன்னோடு
தருவேன் மீதி பிறவிகளை
தருவாய் உன் ஆயுட்களை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community