மன்னிக்க மனமில்லையோ
இயற்கையே தாயல்லவோ
காய்ந்தாலும் பேய்ந்தாலும்
பெயர்ந்தாலும் எரிந்தாலும்
பிள்ளைகள் சாகின்றோம்
பிழைகள் செய்திட்டோம்
வினைகள் விதைத்தோம்
விளைவுகள் மறந்தோம்
வரம்புகள் துறந்தோம்
எல்லைகள் மீறினோம்
படைக்கத் துணிந்தோம்
காக்கத் தவறினோம்
தர்மம் அறியாதவரை
அழித்தே தீருவாயோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment