எண்ணங்களை வண்ணங்களாக்கி
வார்த்தைகளால் வரைந்த ஓவியம்
ஒலியும் ஒயிலும் மிளிரும் காவியம்
கனிவான காதலின் அரங்கேற்றம்
கூடவே நடந்து வரும் கண்ணியம்
ஒப்பிலா வையமாகும் இன்பமயம்
தீட்டுவது காமத்தின் கைகளெனில்
நீக்கமற நிறைந்திருக்கும் விகாரம்
கண்ணும் கருத்தும் சேர்ந்து கூசும்
நாராசமாய் விரசம் மட்டும் பேசும்
களங்கமில்லா கற்பனையே பரவசம்
கொச்சை மொழியோர் பொய் வேசம்
செம்மையாய் செதுக்கிய நல்வைரம்
எப்பக்கம் திருப்பினும் ஒளி வீசும்
செப்பனிடா மனங்களின் வரிகளில்
அசிங்கம்தானே தளும்பி நிற்கும்
ஆழத்து முத்தென அமர காவியம்
ஆற்றில் மிதக்கும் சக்கை மீதம்
சாரமுள்ள வாழ்வில் நிலைக்கும் ருசி
அவசரமான காலம் தீர்த்திடாது பசி
ஆழ்ந்த அனுபவமோ செதுக்கும் உளி
பகுத்தறியா இச்சைகள் வெறும் வெறி
உள்ளத்து உணர்வோ உற்சாக ஊற்று
கட்டாத காமமோ அழிக்கும் காற்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment