Monday, March 15, 2010

சொல்வேன்

சொல்வேன் நான் நடந்து வந்த பாதையில்
புல்லுக்குள் சிரித்திருக்கும் சின்னப் பூக்கள்
பரவசப்படுத்திய சிறு பறவை குரல்கள்
காதுக்குள்ளே ரீங்கரிக்கும் மூதுரைகள்
அதிசயமான அசாதாரண நிகழ்வுகள்
அன்றாட வாழ்வின் சாதாரண அழகுகள்
முள் தோலுக்குள் இனிய பலாச்சுளைகள்
கருங்கல்லுக்குள் ஊறிடும் ஈரச்சுனைகள்
முன்னோர் பதித்துச் சென்ற சுவடுகள்
மூத்தோர் சொல்லிச் சென்ற முறைகள்
என்னை நானாக்கிய ஆயிரம் சிற்பிகள்
கொஞ்சம் கொஞ்சமாய் சொல்வேன்
இதுவரை சொல்லிவந்தது போலவே
கேட்க இத்தனை பேர் இருப்பதனால்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community