சொல்வேன் நான் நடந்து வந்த பாதையில்
புல்லுக்குள் சிரித்திருக்கும் சின்னப் பூக்கள்
பரவசப்படுத்திய சிறு பறவை குரல்கள்
காதுக்குள்ளே ரீங்கரிக்கும் மூதுரைகள்
அதிசயமான அசாதாரண நிகழ்வுகள்
அன்றாட வாழ்வின் சாதாரண அழகுகள்
முள் தோலுக்குள் இனிய பலாச்சுளைகள்
கருங்கல்லுக்குள் ஊறிடும் ஈரச்சுனைகள்
முன்னோர் பதித்துச் சென்ற சுவடுகள்
மூத்தோர் சொல்லிச் சென்ற முறைகள்
என்னை நானாக்கிய ஆயிரம் சிற்பிகள்
கொஞ்சம் கொஞ்சமாய் சொல்வேன்
இதுவரை சொல்லிவந்தது போலவே
கேட்க இத்தனை பேர் இருப்பதனால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment