Monday, March 15, 2010

அழகு?

சீராட தாய்வீடு வந்த மகளை
வழியனுப்ப விமான நிலையத்தில்
கண்ணாடித்தடுப்புக்கப்பால்
கையசைக்க காத்திருக்கையில்
தாண்டிச் சென்றனர் சீருடையில்
தளிர் மேனி தழுவிய சேலையில்
ஒயிலான பொம்மைகள் போல்
விமானப் பணிப் பெண்கள் சிலர்
கண்ட நொடியில் வியந்தேன்
இயற்கையாய் வளர்ந்த வடிவிதுவா
செயற்கையாய் செதுக்கிய வடிவல்லவா
ஏனோ நினைவுக்கு வந்தது
என்றோ வள்ளுவன் வர்ணித்தது
"என்பு தோல் போர்த்திய உடம்பு"

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community