அசுரர் குலத்து சூர்ப்பனகைகள்
அறியாது(?) தவறிய அகலிகைகள்
எரிந்து சாம்பலான சோடோம்கள், கொமோராக்கள்
அவையெல்லாம் உண்மையோ, கதையோ அறிகிலேன்
அகில உலகிலும் புனையின்றி, பொய்யின்றி
அரங்கேறும் புது சரித்திரம் பார்க்கிறேன்
பிறன்மனை நோக்கா பேராண்மை
போதித்த வள்ளுவனே!
பிறந்து வா மறுபடியும்
புதிய மாதவிகளுக்கும்
புத்திமதி சொல்லிவிட்டுப் போ!
பிழைத்துக் கொள்ளட்டும்
பிறந்திருக்கும் ஆணினமும் இனி
பிறக்கப்போகும் மானிடமும் கூட
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment