Sunday, March 14, 2010

என்னவாக

செய்யப்பட்டிருப்பேன் என்னவாக என்று
எண்ணியது காட்டு மரம் ஒவ்வொன்றும்
கட்டிலா தொட்டிலா சவப்பெட்டியா
ஓடமா உத்திரமா பந்தடிக்கும் மட்டையா
வாத்தியக் கருவியா வத்திக்குச்சியா
புத்தகத்தாளா படிக்கட்டுகளா தளமா
பொல்லாத கோடரி வெட்டும் வரை
மழைக்காட்டில் நிற்பேன் மகிழ்வாக

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community