Sunday, March 14, 2010

புரியவில்லை

பெருமிதமா பூரிப்பா
வெறும் ஆனந்தமா
அறிய முடியவில்லை
பிரம்மநிலையோ
தனி யோகமோ
தவ மோனமோ
பேரின்பந்தானோ

பகலா இரவா
புரியவில்லை
குளிரா வெயிலா
பொருட்டாயில்லை
கணங்களா யுகங்களா
கவனமில்லை

விழிப்பா உறக்கமா
விளங்கவில்லை
கேள்வியா பதிலா
தேவையில்லை
கசப்பா இனிப்பா
கவலையில்லை

நீயா நானா
வேறில்லை
ஓரியக்கம் ஓரிலக்கு
சுகமான பயணம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community