Tuesday, March 16, 2010

சேதி

தேன்மலர்கள் காற்றில் ஆடி
அழைத்த வண்டுகள் பாடி
பூப்பூவாய் திகையாமல் ஓடி
பதமான அமுதைத் தேடி
மதுவின் போதையும் கூடி
நகரும் கால்கள் தள்ளாடி
ஒட்டிய மகரந்தப்பொடி
பூவெங்கும் உதிர்த்தபடி
சிலிர்க்குது செடிகொடி
சிறப்பானது அந்த நொடி
பிறக்குது அடுத்த அடி
பிழைக்குது தாவர நாடி
தொடர்கின்ற வாழையடி
இது நுட்பமான சேதியடி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community