பூமாதேவி போன்றவள் அவளே
பொறுமை அறிந்தவள் அன்னையே
போகிற போக்கில் அதையே
கற்றுத் தந்திட அறிந்தவள்தானே
ஒருநாள் அப்பம் சுட்டாள்
தட்டில் வைத்தாள் சூடாய்
ஆகா வாசம் அபாரம்
ஆவலும் பசியும் அதிகம்
அருமை மகன் அமர்ந்தான்
அவசரமாய் ஆத்திரமாய்
நட்ட நடுவில் தொட்டான்
விரலைச் சுட்டுக் கொண்டான்
புத்தியில்லா சந்திரகுப்தன்
நேரடியாய்த் தலைநகரைத்
தாக்கித் தோற்றது போல்
நீயும் ஏனடா செய்தாய்
ஆறத் துவங்கிய ஓரத்தை
விண்டு எடுத்துச் சுவைக்காமல்
ஏமாந்து சூடு பட்டாயே என்று
பரிகாசம் செய்தாள் எளியவள்
துவண்டு நின்ற சந்திரகுப்தன்
புத்தியில் உறைத்தது இம்மொழி
பிழையின்றி யுக்தியை பின்பற்ற
பின்னாளில் மாமன்னன் ஆனானே
ஆத்திரம் அவசரம் ஆகாது
வேதனை தோல்வி விளைந்திடும்
தந்திரம் நிதானம் இரண்டும்
காரியம் சாதிக்கத் தேவை
சந்திரகுப்தனும் சாணக்கியனும்
கற்ற சாதாரண பாடமிது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment