தாயினுடையது தாராள மனசு
ஈரம் வற்றாத அமுத ஊற்று
வாய் உதிர்க்கும் வசைமொழி
கை ஓங்கும் ஆத்திரத்தில்
கடுமையான எச்சரிக்கைகள்
அத்தனையும் பாசாங்குகள்
உறங்கும் போதும் ஒரு கனவு
விழிப்பினிலும் ஒரே நினைப்பு
கண்காணிக்கும் பரிவில்
கர்ப்பப்பையின் கதகதப்பு
அடுப்பை மூட்டும் போதும்
உப்பை எடுக்கும் போதும்
கடுகை தாளிக்கும் போதும்
உள்ளங்கையில் ஊற்றிய சொட்டு
கணிக்கப்படும் தீவிரத்திலும்
தெரிவது ஒரு யாகமா
தன்னை மறந்த தியாகமா
முழு வாழ்வும் ஓர் தவமா
மகவாய் பிறந்திட வேண்டும்
இப்பேறில் சுகித்திருக்க
தாயாய் பிறந்திட வேண்டும்
தரணியை தன் வசமாக்க
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment