தூங்கா உலகம் இதுவே
நீங்கா இன்பம் தருவது
பகலோ இரவோ அறியாது
பாட்டு தொடர்ந்து கேட்டிட
பட்டி மன்றங்கள் நடத்திட
பழங்கதைகள் பகிர்ந்திட
பதில்கள் பலவும் பெற்றிட
பொழுதை நன்கு போக்கிட
சொற்சிலம்பம் ரசித்திட
கருத்து வாட்கள் உரசிட
பொறிகள் பறந்து சிதறிட
மத்தாப்பூ மழை சிந்திட
தினமும் தீபாவளியிங்கு
ஏறிச் செல்லுமிப் படிக்கல்
கூராக்கும் சாணைக்கல்
கனவுகள் ஆடும் மேடை
குப்பைகள் குவியும் கூடை
உறக்கம் மறந்த நாட்களும்
உற்சாகம் மிகும் ஆட்களும்
வளர்பிறை போல் காணுதே
தொடர்கதையாய் ஆனதே
தூண்டில் இதிலே சிக்கியே
துடிக்கும் மீன்கள் கோடியே
ஒட்டிக்கொண்ட தொல்லையோ
விடுதலைதான் இல்லையோ
தொடர்புகளின் எல்லையோ
மணக்கும் பூக்கொல்லையோ
மதுவுண்ணும் வண்டானோம்
மயங்கிக் கிடக்கின்றோம்
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment