Monday, March 15, 2010

தூங்கா உலகம்

தூங்கா உலகம் இதுவே
நீங்கா இன்பம் தருவது
பகலோ இரவோ அறியாது
பாட்டு தொடர்ந்து கேட்டிட
பட்டி மன்றங்கள் நடத்திட
பழங்கதைகள் பகிர்ந்திட
பதில்கள் பலவும் பெற்றிட
பொழுதை நன்கு போக்கிட
சொற்சிலம்பம் ரசித்திட
கருத்து வாட்கள் உரசிட
பொறிகள் பறந்து சிதறிட
மத்தாப்பூ மழை சிந்திட
தினமும் தீபாவளியிங்கு
ஏறிச் செல்லுமிப் படிக்கல்
கூராக்கும் சாணைக்கல்
கனவுகள் ஆடும் மேடை
குப்பைகள் குவியும் கூடை
உறக்கம் மறந்த நாட்களும்
உற்சாகம் மிகும் ஆட்களும்
வளர்பிறை போல் காணுதே
தொடர்கதையாய் ஆனதே
தூண்டில் இதிலே சிக்கியே
துடிக்கும் மீன்கள் கோடியே
ஒட்டிக்கொண்ட தொல்லையோ
விடுதலைதான் இல்லையோ
தொடர்புகளின் எல்லையோ
மணக்கும் பூக்கொல்லையோ
மதுவுண்ணும் வண்டானோம்
மயங்கிக் கிடக்கின்றோம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community