Monday, March 15, 2010

தயிர்

மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன்
மனம் திரியாமலே தனித்திருந்தேன்
என் துணையோடேஇணைந்திருந்தேன்
சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன்
என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன்
முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன்
உரைகுத்திய கெட்டிக்காரத்தனத்திலே
மணங்கூடி உயர்ந்தேன் ஊட்டச்சத்திலே
மீண்டும் பாலாய் மாறாத தயிரானேன்
யாண்டும் ஞாலம் பெருக உயிரானேன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community