மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன்
மனம் திரியாமலே தனித்திருந்தேன்
என் துணையோடேஇணைந்திருந்தேன்
சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன்
என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன்
முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன்
உரைகுத்திய கெட்டிக்காரத்தனத்திலே
மணங்கூடி உயர்ந்தேன் ஊட்டச்சத்திலே
மீண்டும் பாலாய் மாறாத தயிரானேன்
யாண்டும் ஞாலம் பெருக உயிரானேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment